அமெரிக்க செய்தி
இரண்டாவது அதி வயது கூடிய அமெ. பெண்மணி 114 வயதில் காலமானார்
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:27.54 பி.ப GMT ]
மேரி ஜொசப்பின் எனும் அமெரிக்கப் பெண்மணி தனது 114 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவர் கனடாவில் 1895ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி பிறந்தவர்.

1923ஆம் ஆண்டு இவர் வோல்டர் என்பவரை மணந்து கொண்டார். இவரது கணவர் 1967 ஆம் ஆண்டு மரணமானார். இவருக்கு இரண்டு மகன்களும் எட்டுப் பேரப்பிள்ளைகளும, 13 கொள்ளுப் பேரர்களும் உளர்.

இவரே உலகின் இரண்டாவது அதி வயது கூடிய பெண்மணியாவார். முதலாவது வயது முதிர்ந்த, ஜப்பானைச் சேர்ந்த பெண்மணி, இவரைவிட 7 நாட்களே மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மற்றுமொரு 114 வயது பெண்மணியான நேவா மொரிஸ் என்பவரும் காலமானார். இவர் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி பிறந்தவர்.

பிரான்ஸைச் சேர்ந்த யூஜின் பிளான்சார்ட் மூன்றாவது அதி வயது கூடிய பெண்மணியாகக் கருதப்படுகின்றார். இவர் 1896ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி பிறந்தவர்.

அமெரிக்காவில் சுமார் 96,000 பேர் 100 வயதைத் தாண்டியும் வாழ்ந்து கொண்டிருப்பதாக கின்னர்ஸ் உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
09 - 09 - 09:09 நிமிடத்தில் 163 ஜோடிகளுக்குத் திருமணம் : தாய்வானில் புதுமை!
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க புதிய சட்டத்தை உருவாக்க கனடா திட்டம்
குரான் எரிப்பு போராட்டத்தால் தீவிரவாதம் ஊக்கம்பெறும் : ஒபாமா
பெண்ணைக் கடுமையாகத் தாக்கிய பிரிட்டிஷ் பொலிஸாருக்குச் சிறை
சுயேச்சைகள் ஆதரவுடன் பிரதமராக கிலார்ட் ஆட்சி
தன்னம்பிக்கை தளராத அரை மனிதர்
பழைமை வாய்ந்த நாணயங்கள் ஜேர்மனியில் கண்டுபிடிப்பு
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி
இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
[ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ]
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்]
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ]
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்]
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
[ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்]
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]