அமெரிக்க செய்தி
உலக வர்த்தக மைய தாக்குதல் ரகசிய திட்டம் : புதிய தகவலால் பரபரப்பு
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:56.28 மு.ப GMT ]
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை பதவியில் இருந்து அகற்றுவதற்குஇ பிரிட்டன் ரகசிய திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது கடந்த 2001 செப்டம்பரில் அல்-குவைதா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

இதில் அந்த கட்டடம் தரை மட்டமாகியது. இதைத் தொடர்ந்து ஈராக் மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தின. தலைமறைவான அப்போதைய ஈராக் ஜனாதிபதி சதாம் உசேனை அமெரிக்க ராணுவம் கைது செய்தது. இதையடுத்து அவர் மீது ஈராக் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கில் போடப்பட்டார்.

ஆனால் அமெரிக்க உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு முன்னதாகவே ஈராக் ஜனாதிபதி பதவியில் இருந்து சதாம் உசேனை அகற்றுவதற்கு பிரிட்டன் அரசு ரகசிய திட்டமிட்டதும் இது தொடர்பாக ஈராக்கில் உள்ள சதாம் எதிர்ப்பாளர்களுடன் ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் நகல் ஒன்று தற்போது கைப்பற்றப்பட்டு வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்க பிரதமர் டோனி பிளேருக்கும் சதாம் உசேன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இந்த உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஈராக் நாட்டுக்கும் மக்களுக்கும் பிரிட்டன் எப்போதும் ஆதரவாக இருக்கும். ஈராக் மக்களுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது.

ஈராக் மக்களின் உரிமைகளை காக்கவும் அங்கு நிரந்தர அமைதி ஏற்படவும் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் பிரிட்டன் உதவும். அடக்கு முறையில் இருந்தும் அநியாயமாக கைது செய்யப்படுவதில் இருந்தும் ஈராக் மக்களை காப்போம்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி சதாம் உசேன் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் ஈராக்குடன் எண்ணெய் கிணறு தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்படும்.

ஈராக் சார்பில் வாங்கப்பட்ட கடன் ரத்து செய்யப்படும். வர்த்தக உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படும். உலக வங்கிஇ சர்வதேச நிதியகம் ஐரோப்பியயூனியன் ஆகியவற்றிடம் இருந்து நிதி உதவி பெற்றுத் தரப்படும்.இவ்வாறு அந்த ஒப்பந்ததில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டோனி பிளேர் தற்போது கூறுகையில் "அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னரே சதாம் உசேனை ஆட்சியில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனம் செலுத்தப்பட்டது' என்றார்.இந்த விவகாரம் பிரிட்டனில் மட்டுமல்லாமல்இ சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கல்லால் அடிக்கும் தண்டனை : வாடிகன் எதிர்ப்பு
4 உலக தலைவர்கள் உயிருக்கு ஆபத்து; உலகம் பல அழிவுகளை சந்திக்கப் போகின்றது : நாஸ்டர்டாம் கணிப்பு
இணையதளத்தில் பெண் எழுத்தாளரை கற்பழித்ததாக கட்டுரை எழுதியவர் கைது
ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் : 5 பேர் பலி, 39 பேர் படுகாயம்
டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு
நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி
நியூஸிலாந்தில் பாரிய நிலநடுக்கம்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:53.09 பி.ப ]
நேர்காணலுக்கு செல்வோர் தங்கள் மிடுக்கை வெளிக்காட்டுவதற்கு ஏற்ற ஆடைகளை அணிவது வழக்கம். நேர்காணல் நடத்துவோரை கவர, கவர்ச்சியாக உடை அணிந்து செல்லும் பெண்களும் உண்டு. இதனால், வேலைக்கான வாய்ப்பு அதிகரிப்பதாக ஒரு மாயை நிலவியது. அதுவே தற்போது ஆபத்தாக மாறியுள்ளது. [மேலும்]
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ]
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ]
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்த நீதிபதி கைது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:03.06 மு.ப ]
சிறுமியின் நிர்வாணப்படத்தினை கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதியை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து அவருக்கு அடி கொடுத்தனர். [மேலும்]
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]